பணிமாற்ற - பணியேற்புத்
திருப்பலியும் ஒன்றுகூடலும் - 19.03.2016
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எமது பணியகத்தின் இயக்குனராக சிறப்புடன் பணியாற்றிவரும் அருட்பணி. அ. ப. பெனற் அடிகளார் யாழ். ஆயரின் அழைப்பின் பேரில் பணிமாற்றம் பெற்று விரைவில் தாயகம் திரும்பவுள்ளார் என்பதனையும்,
இப்பணிக்காகப் புதிதாக யாழ். ஆயரால் நியமனம் பெற்று யேர்மனி வருகை தந்துள்ள அருட்பணி. நிரூபன் தார்சீசியஸ் அடிகளார் யேர்மன் ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனராக விரைவில் பணியேற்கவுள்ளார் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இறைவனுக்கு நன்றிகூறி திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், பிரியாவிடை பெறவும், புதிய இயக்குனரை வரவேற்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம் |
திகதி |
நேரம் |
முகவரி |
Essen |
19.03.2016 (Samstag) |
15.00 மணி |
St. Getrud Kirche Rottstraße 36 45127 Essen |
திருப்பலி நிறைவில் இவ் ஆலய மண்டபத்தில் நன்றி நவிலல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் நன்றி நவிலல் நிகழ்வில் பலவிதமான கலைநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரையும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
|