நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்காக் காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2024-04-18



ஆண்டவர் இயேசுவே,
எனக்காக மனுவுரு எடுத்தவரே! உம்மை ஆராதிக்கின்றேன். எனக்காக நற்கருணையில் வீற்றிருப்பவரே! ஆராதிக்கிறேன். “வாழ்வுதரும் உணவு நானே” என்றவரே! என் ஆன்ம பசியைப் போக்கும். இயேசுவே! உம் வார்த்தையை அனுப்பி என் அச்ச உணர்வுகள், என் தோல்விகள், கண்ணீர்கள், தனிமை, ஏக்கங்கள் அனைத்திலும் இருந்து விடுவித்தருளும். உமது காயத்தால் என் உடல் வாதைகள் அனைத்தையும் சுமந்தவரே! உமக்கு நன்றி கூறுகின்றேன். எனக்கு சமாதானத்தை அருள வந்த உமக்கு, நான் என் பாவங்களால் துன்பங்களையே தந்தேன் ஐயா! என்னை மன்னியும். பாவிகளையே மீட்க வந்த தெய்வமே! என்பாவத்தை மன்னித்து புதுவாழ்வு தரபோவதற்காக நன்றி கூறுகிறேன். உமக்காக இரத்தம் சிந்தி தனது வாழ்வை உமக்காக அர்ப்பணித்த புனிதர்களைப் போன்று நானும்; அவர்களில் விளங்கிய மன வலிமையையும், தூய்மையான வாழ்வையும் என்னில் வளர்த்திட நிறைவான கிருபையையும்; உமது பலத்தை தூய ஆவி வழியாகவும் பெற ஆசீர்வதியும். தேவபயமும் தேவ பக்தியும்; நிறைந்த சாட்சியான வாழ்வு வாழ அருள் தாரும். இன்றைய நாளில் ஒவ்வொரு நிமிடமும் உமக்கு உகந்த மகனாக வாழவும், மற்றவரை உமது பாதையில் அழைத்து வரும் உமது கருவியாக மாறவும் வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

WUCWO ஒன்றியம் நடத்தும் நிகழ்நிலை சந்திப்பு



உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்புகளின் ஒன்றியத்திற்கு (WUCWO) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்தளவில் தனது ஆதரவை வழங்கி வருகின்றார் என்று கூறியுள்ளார் அதன் தலைவர் Mónica Santamarina. வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, இவ்வமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணையதளவழி... [2024-04-17 22:03:15]



காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி சாட்சியம்



காசாவில் 200 நாட்களாக நீடித்து வரும் மோதலால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும், போரின் கொடூரத்தால் அவர்களின் வாழ்க்கையே மாறிபோயுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஏப்ரல் 17, இப்புதனன்று இத்தகவலை வழங்கியுள்ள... [2024-04-17 22:01:49]



உரோம் புறநகர் பங்குதளத்தில் சிறார்களுடன் திருத்தந்தை



உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் உரோம் புறநகர் பகுதியின் புனித ஜான் மரி வியான்னி பங்குதளத்திற்குச் சென்று அங்கு புது நன்மைக்காகத் தயாரித்துவரும் சிறார்களுக்கு இறைவேண்டலின் பள்ளி என்ற இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ... [2024-04-13 01:24:19]

காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!



இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி... [2024-03-14 22:51:51]



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்



இலங்கையின் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயர் கிளீட்டஸ் சந்திரசிரி பெரெரா அவர்கள் பணி ஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவரும் 76 வயதான ஆயர் கிளீட்டஸ்... [2024-03-05 22:42:47]

மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களியுங்கள் : பேராயர் பீட்டர் மச்சாடோ



இந்திய நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற அரசிற்கு வாக்களிக்குமாறு கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
மதச்சார்பற்ற, வகுப்புவாதமற்ற, அரசியல் சாசனத்தில் நம்பிக்கையுள்ள, ஊழல் குறைந்த ஒரு... [2024-04-11 23:00:56]



இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு CBCI-இன் புதிய வழிகாட்டுதல்கள்!



இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI), தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது கிறிஸ்தவ மரபுகளைத் திணிக்காமல், அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை ஊக்குவிக்க அறிக்கை... [2024-04-10 23:03:26]

சந்திப்பின் காலம் - தவக்காலம்



இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம் நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம் ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம் பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம் சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம் சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் [2021-02-14 12:20:14]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG



எது திருவருகைக்கால பரிசு



திருவருகைக் காலம் என்பது என்னை எனக்குள் உள்நோக்கி செல்ல அழைக்கும் ஒரு புனிதகாலம். இந்த புனித காலத்தில் அனைத்து விதமான பரப்பரப்பான சூழ்நிலைகளில் இருந்தும் சற்று நிதானத்திற்குள் செல்ல அழைக்கும் காலமே இந்த திருவகைக்காலம். நம்மை அறிந்துக்கொள்ள முற்படுகின்ற போது படைத்த இறைவனின் அன்பை அறிந்து அவரையே பிரதிப்பலிக்க முற்படுகிறோம். இப்படிப்பட்ட பிரதிப்பலிப்பை கொடுக்க அழைக்கும் காலம் தான் இந்த திருவகைக்காலம். படைத்தவராம் நம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, அவர் படைப்புக்களுக்கு அமைதியை ஏற்படுத்தும் காலமே இந்த திர [2019-12-15 18:44:39]

எழுத்துருவாக்கம்:

நற்சிந்தனை -மக்களே கேளுங்கள்


2024-04-18

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

மரியாள் பகுதி 4


2024-04-18

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.




பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2024-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! செபிப்பதுடன் நீங்கள் விதைத்த விதைகளால் நன்மைகள் நடக்க உங்கள் இதயத்தைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள், இது மகிழ்ச்சியின் கனிகளையும் கடவுளுடன் ஐக்கியத்தையும் உருவாக்குகின்றது. களைகள் பல இதயங்களை ஆட்கொண்டு அவர்களை கனி கொடுக்காமல் தடுத்துவிடுகின்றது, ஆகவே அன்பான பிள்ளைகளே, ஒளியாகிய நீங்கள், அன்புடன் இவ்வுலகில் எனது விரித்த கரங்களுக்குள் வாருங்கள். அதுவே இறைவனிடம் உங்களை அழைத்துச் செல்லும். எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி.“




2024-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்த நேரம் செபிக்கும் நேரமாக இருக்கட்டும்"




2023-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலத்தை செபத்துடன் அமைத்து, சமாதானம் மற்றும் நல்ல விடயங்கள் நடைபெற உதவுங்கள், இதன்மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்வு உங்கள் இதயத்தை, குடும்பத்தை மற்றும் உலகை நிரப்பட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."


திருவெளிப்பாட்டு ஆண்டு


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)