பொதுக்காலம் - 30 ஆம் வாரம்

புதன் அக்டோபர் , 31.10.2012


முதல் வாசகம்



தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:21-33

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6:1-9 1 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. 2 "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. 3 "இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்" என்பதே அவ்வாக்குறுதி. 4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். 5 அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள். 6 மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். 7 மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வதுபோல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். 8 அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! 9 தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 145:10-11, 12-13, 13-14

பல்லவி: ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; பல்லவி

13 உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலுயா அல்லேலுயா "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்" -அல்லேலுயா

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:22-30

22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். 23 அப்பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது; 24 "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 25 "வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்" என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது" எனப் பதில் கூறுவார். 26 அப்பொழுது நீங்கள், "நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே" என்று சொல்வீர்கள். 27 ஆனாலும் அவர், "நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்" என உங்களிடம் சொல்வார். 28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாகினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்பீர்கள். 29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். 30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். "


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


இடுக்கமான பாதை

இயேசு எருசலேம் நகர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். எருசலேம் அரண் சூழ்ந்த நகர். சுற்றுச் சுவர்கள், காவல்மாடங்கள் நிறைந்த நகர். காரணம், அது அரசரின் நகர். ஏரோதின் அரண்மனை, பிலாத்துவின் அரண்மனை, தலைமைக்குருக்களிள் அரண்மனை எல்லா இங்கு உண்டு. இவை அனைத்திற்கும் மேலாக, பேரரசரின் நகர் இது. அரசர்க்கரசராம் யாவே இறைவனின் ஆலயமே அவ்வரண்மனை. எருசலேம் நகருக்குள் நுழைவதாயினும், எருசலேம் தேவாலயத்துள் நுழைவதாயினும் அவ்வளவு எளிதல்ல. பல சிரமங்கள் துன்பங்கள் அடைந்தே நுழைய முடியும். இடுக்கான வாயில்கள், சில நுழைவாயில்களில் மிகக் குனிந்தும் தவண்டும் செல்லவேண்டும். எருசலேம் தேவாலயத்துள் நுழைவதும் அவ்வளவு எளிதல்ல. இந்த அன்றாட அனுபவத்தை, புதிய எருசலேமாம் விண்ணகத்தில் நுழைய "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்" என்கிறார் இயேசு. நாங்கள் உம்மோடு உண்டோம், குடித்தோம் என்பதெல்லாம் வகைக்கு உதவாதவை. தன்னுடைய சிலுவையை நாள்தோறும் சுமந்து இயேசுவைப் பின் செல்பவனும், எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து இயேசுவைப் பின் செல்பவனும், பசியாய் இருந்தவனுக்கு உண்ணக்கொடுத்தவனும், தாகத்தைத் தணித்தவனும், அன்னியனை ஏற்றுக்கொண்டவனும்,.. ரூhநடடip; .. .. இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்களே.

மன்றாட்டு:
இப்பாதையில் நுழையும் ஒருவராக உன்னை உறுதிப்படுத்திக்கொள்.